|
|
||
|
சங்க இலக்கியங்கள்
சமய இலக்கியங்கள்
காப்பிய இலக்கியங்கள்
|
பிற இலக்கியங்கள்
|
|
|
தமிழ்க் களஞ்சியம்
தமிழ்ப் பணியாளர்கள்
|
|
வானவியல்
ஒளியியல்
|
|
பொதுஅறிவுக் களஞ்சியம்
நீதிக் கதைகள்
விளையாட்டுகள்
|
|
|
ஆன்மீக நூல்கள்
ஆன்மீக செய்திகள்
யோகக் கலைகள்
|
|
|
வேத ஜோதிடம்
ஆரூடங்கள்
|
எண் ஜோதிடம்
|
|
பொது மருத்துவம்
|
|
உடல் நலம்
சமையல் பக்கம்
அலங்காரம்
|
|
வார்த்தை சிரிப்புகள்
|
|
திரைப்படம்
|
தமிழிசை
|
|
எட்டுத்தொகை (Ettuthogai)![]() கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும். இப் பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர். எட்டுத்தொகை நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
இவ்வெட்டுத் தொகை நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். 1.அகப்பொருள் பற்றிய நூல்கள்: இப்பிரிவில், ஆகிய ஆறு நூல்களும், 2.புறப்பொருள் பற்றிய நூல்கள்: இப்பிரிவில், ஆகிய மூன்றும், 3.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்: இப்பிரிவில், ஆகிய ஒன்றும் அடங்கும். எட்டுத்தொகை நூல்களைப் பாடிய புலவர்கள் ஏறத்தாழ ஐந்நூற்றுவர். இதில் பெண்பாற் புலவர்களும் அடக்கம், இவர்கள் பல ஊர்களில் வாழ்ந்தவர்கள். பல்வேறு காலத்தவர்கள். பல்வேறு பிரிவினர்கள். இவர்களுடைய பாடல்களில் பெருநில வேந்தர்களின் வெற்றிச் சிறப்புகளையும், போர்த்திறமையையும் விவரித்துக் கூறும் பாக்கள் பல; போரைத் தடுத்து அறிவு புகட்டுவன சில; வள்ளல் தன்மையை பாராட்டுவன பல; வருமையின் கொடுமையினை வருணிப்பன சில; மாண்பதை வாழ வழிகாட்டுவன பல; ஆணும் பெண்ணும் மனம் இணைந்து ஒழுகும் அன்பொழுக்கங்களை எடுத்துரைப்பன சில; வரலாற்றுக் குறிப்பினையும் புராண இதிகாச செய்திகளை குறிப்பிடுவன சில, பொதுவாக பழந்தமிழ் நாட்டின் வரலாற்றினை இதன் மூலமாக அறிகின்றோம். - க.பா.சக்தி வேலன்
|
|